S. Shivany / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரனை- கந்தனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாரென, நாகொட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, இவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென, நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.
பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றிவரும், குறித்த நபரின் மனைவி தற்போது ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பெற்றோரும் பிள்ளைகள் இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago