2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

காதலன் கொடுத்த சாக்லேட்டை வீட்டில் பிரித்ததும் உயிரை துறந்த காதலி

Editorial   / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வயதான மாணவிக்கு அவரது காதலனால் கொடுத்த சாக்லேட்டை வீட்டில் வைத்து பிரித்து பார்த்த காதலி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம், கொல்கத்தாவில் இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தா: கல்லூரி ஒன்றில் பயிலும் 20 வயது மாணவிக்கு அவளது கல்லூரி நண்பன்  செய்த "விளையாட்டு" என்று கூறப்படும் கொடூரமான செயல் அரங்கேறியுள்ளது.

சம்பவம் கடந்த வாரம் நடந்தது. அப்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  அவளுக்கு ஒரு சாக்லேட் பரிசாக கொடுத்திருந்தான். "இதை யாரும் இல்லாத இடத்தில் தனியாக சாப்பிடு" என்று சிரித்தபடி கூறியிருந்தான். அனன்யா அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்.

அன்று வீட்டில் உறவினர்கள் சிலர் இருந்தனர். அப்பெண் சாக்லேட்டை பிரித்து எடுக்க முயன்றபோது, கவருக்குள் இருந்த சாக்லேட்டுடன் சேர்த்து ஒரு ஆணுறை பாக்கெட் கீழே விழுந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். உறவினர்களின் முன்னிலையில் இப்படியொரு "அசிங்கமான" பொருள் வெளியே வந்ததால், குடும்பத்தினர் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.

"இது எப்படி வந்தது? உன் நண்பன் யார்? என்ன உறவு உங்களுக்கு?" என்று பெற்றோரும் உறவினர்களும் தொடர் கேள்விகளால் அவளை சூழ்ந்தனர். அப்பெண் கண்ணீருடன், "அவன் என் கல்லூரி நண்பன் மட்டுமே. காதல் எதுவும் இல்லை. பிறந்தநாள் பரிசாக கொடுத்தான். எனக்கு இதெல்லாம் தெரியாது" என்று விளக்க முயன்றாள். ஆனால் குடும்பத்தினரின் வசைபாடலும், சந்தேகக் கண்களும் தாங்க முடியாமல் போயின.

மனமுடைந்த அப்பெண் தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள். சில மணி நேரங்களில் அவள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். அவளது உடலை மீட்ட பொலிஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாக்லேட்டை கொடுத்த நண்பன் கைது செய்யப்பட்டான். அவன்  பொலிஸிடம் கூறியது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது:

"அவள் மீது எனக்கு ஆசை இருந்தது. அதை வெளிப்படுத்தும் விதமாக விளையாட்டுக்காக சாக்லேட்டுடன் ஆணுறையை வைத்து கொடுத்தேன். இப்படி பெரிய விபரீதம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை. யாரும் இல்லாத இடத்தில் சாப்பிடச் சொன்னேன். குடும்பத்தினர் முன்பு பிரிப்பாள் என்று தெரியாது."

பொலிஸார் தெரிவித்தபடி,   தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் சமூகத்தில் "விளையாட்டு" என்ற பெயரில் செய்யப்படும் கொடூரமான செயல்களின் விளைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு சிறு "பரிசு" எப்படி ஒரு இளம் உயிரை பறித்துவிடும் என்பதற்கு இது கொடூரமான எடுத்துக்காட்டு.

  "எங்கள் மகளை இழந்துவிட்டோம். இது விளையாட்டல்ல, கொலைக்கு சமம்" என்று அப்பெண்ணின் உறவினர்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவது, விளையாட்டு என்ற பெயரில் எல்லை மீறுவது போன்றவை பெரும் விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதை இச்சம்பவம் எச்சரிக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .