2026 மார்ச் 16, திங்கட்கிழமை

கிளப் வசந்த கொலை: சந்தேக நபருக்கு பாதுகாப்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளப் வசந்த சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 11 சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (20) நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். 

 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களின் விளக்கமறியலை செப்டம்பர் இரண்டாம் திகதி வரை நீடித்து  கடுவல நீதவான் சனிமா விஜய பண்டார உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களில் ஒருவருக்கு  உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது சார்பில்  நீதிமன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X