2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

Editorial   / 2020 ஜனவரி 22 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம, நாவின்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் முற்றியதில் நேற்று (21) இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவின்ன பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை மிரிஹான பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .