2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கெக்கிராவ விபத்தில் மூவர் பலி: ஏ - 9 வீதிக்குப் பூட்டு

Editorial   / 2019 ஜூன் 08 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் -​ கெக்கிராவையில், திப்பட்டுவாவ பகுதியில் இன்று (08), காலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், ஏ - 9 வீதியை மறித்து, பிரதேச வாசிகள் மேற்கெண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, ஏ - 9 வீதி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாகவே, வீதியின் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பலகை கொண்டுச்சென்ற லொரியொன்று, மேலதிக வகுப்புக்குச் செல்ல, வீதியின் ஓரமாக நின்று்கொண்டிருந்த பாசடாலை மாணவர்களை மோதிவிட்டு, நிறுத்தாமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ​மேலுமொரு மாணவர், தம்புளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .