2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் ​கைது

Editorial   / 2019 மே 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

நாத்தாண்டிய - அசோகபுர பிரதேசத்தில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய நபர் ஒருவரை, நேற்று (03) கைதுசெய்யதுள்ளதாக, மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மதர வீதி, ஹெட்டிவத்த, நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், மாரவில் பொலிஸார் சந்தேக நபருடைய வீட்டை நேற்று (03) பரிசோதனை செய்தனர். 

இதன் போது, சந்தேக நபரின் வீட்டில் இருந்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட பிஸ்டோல் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவை ஒன்றும், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .