Lenin Raj / 2026 மார்ச் 24 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார்.
இவர் சற்று முன்னர் தப்பிச்சென்றுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற வேளையிலேயே குறித்த கைதி தப்பிச்சென்றுள்ளார்.
மலசலகூடம் செல்வதாக தெரிவித்து கைவிலங்குடன் கழிவறைக்குள் சென்றவர் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
கைதி யை மீண்டும் கைது செய்ய மட்டக்களப்பு பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
11 minute ago
34 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
36 minute ago