Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 15 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட சில பிரதேசங்களுக்கு, இன்று நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என, தேசிய நீர்வழங்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், இன்று நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் நாளை பிற்பகல் மாலை 6.00 மணிவரை, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிடி, மொரகொஸ்முல்ல, இராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல-கொஸ்வத்த மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களில் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகள் காரணமாகவே, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago