Editorial / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லானாவை பதவி நீக்குமாறு கோரி வைத்தியசாலை வளாகத்தில் உத்தியோகபூர்வமற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த மருத்துவமனையின் சுமார் 300 ஊழியர்கள் வேலைக்குச் சென்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர்களில் சிலர் கூடுதல் நேர உதவித்தொகையைப் பெறுவதாகவும் அதிகாரி கூறினார். மேலும் கண், குழந்தைகள், பல் மற்றும் சொய்சா மருத்துவமனைகளின் ஊழியர்களும் இருப்பதாக அதிகாரி குறிப்பிட்டார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 3000 ஊழியர்கள் தேசிய வைத்தியசாலையில் பணிபுரிவதாகவும், பணிக்கு சமூகமளிக்கும் மற்றும் உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago