2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோழி லொறி மீது மோதிய காட்டு யானை

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை ரிடியெல்ல பகுதியில் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதியதில் லொறி கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில் இறந்து கிடந்ததாக வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறி தம்புள்ளையிலிருந்து பகமுன நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று சாலையைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக லொறியில் பயணித்த ஒரு தொழிலாளி தெரிவித்தார்.

காட்டு யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து சாலையை விட்டு விலகிச் சென்றதாகவும் அவர் கூறினார். விபத்தில் ஏராளமான கோழிகள் இறந்திருப்பது தெரிந்தது.

உயிருடன் இருந்த மற்ற கோழிகளும் சாலையில் கிடந்தன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X