2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கார் விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பண்டாரநாயக்க மாவத்தையில் காரொன்று, முன்னாள் பயணித்துகொண்டிருந்த டிரக்டர், பௌசருடன்; மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்தவர்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10க்கு இடம்பெற்ற இந்த விபத்தில் கண்டியை வதிவிடமாகக் கொண்ட பிரேமகுமார ஜயசுந்தர (வயது 42), கட்டுகஸ்தோட்டையை வதிவிடமாகக்கொண்ட திலான் குணசேகர ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த டிரக்டர்- பௌசர் வாகனத்தின் சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரின் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X