2025 மே 21, புதன்கிழமை

காவத்தை பெண்கொலை; ஒருவர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓபானவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 48 வயதான பெண்ணை செப்டெம்பர் 28ஆம் திகதியன்று படுகொலைச்செய்தார் என்ற குற்றஞ்சாட்டில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரை அவரை இன்று வெள்ளிக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள 35 வயதான நீல் லக்ஷ்மன் என்பவர், தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

48 வயதான பெண், சம்பவத்தினத்தன்று தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று வீட்டுக்கு மாலை திரும்பிகொண்டிருந்த போதே வெட்டிக்கொலைச்செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .