2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய  வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை பயணி ஒருவர், திங்கட்கிழமை (06)  அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மூன்றரை ஆண்டுகள் துபாயில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றியுள்ளார்.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (06) அன்று 05.20 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் விமானம் மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரின் பயணப் பையை சோதனையிட்ட போது அதிலிருந்து 9000 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 45 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

டீ.கே.ஜி. கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X