2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘சங்கடபடுத்த வேண்டாம்’

Editorial   / 2019 மே 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்துக்குரிய நபர்களை சோதனையிடுவதற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்காக பொருத்தமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜயசிங்க, முகத்தை மறைக்காத விதத்தில் தலைகளை மாத்திரம் மறைக்கும் ஆடைகளை அணிந்து வருபவர்களை சங்கடங்களுக்கு உட்படுத்துவதை தவிர்க்கும் விதத்தில் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சகல வைத்தியசாலைகளுக்கு நேற்று (02) அனுப்பிவைத்துள்ள, விசேட சுற்றுநிருபத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார நிறுவனங்களுக்கு வருகைத் தருவோரை அடையாளங்காண்பதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானதாகும். அதனடிப்படையில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தீர்மானம் மற்றும் எம்மால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .