2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞன் கைது

Freelancer   / 2025 ஜூன் 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 7,600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன்  சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் எலபடகமவைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது  குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .