2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சரணடைந்த தேரர்களுக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

Gavitha   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டபோது, ஹோமாகம நீதிமன்றத்துக்கு முன்னால் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் நேற்று திங்கட்கிழமை சரணடைந்த இரண்டு பிக்குகளையும்  எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம  மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தவிட்டுள்ளார்.

சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளரான மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்குபுரேஅரியஷாந்த தேரர் ஆகிய இரு பிக்குகளும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அதனையடுத்து, குறித்த இருவரையும் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பிக்குகள், இன்றைய தினம் சரணடையவுள்ளதாக சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X