2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சர்ச்சை

George   / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து, களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டது.

எனினும், அவரது மரணம் தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பது குறித்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அதன் காரணமாக இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றது, அவரது பிள்ளைக்கு மேலதிக வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் அவரது கணவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதேச பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

நீதவான் மற்றும் அரச பகுப்பாய்வு அதிகாரியின் பரிசோதனை இன்று நடைபெற்றதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5