2025 ஜூன் 18, புதன்கிழமை

’சுமந்திரனைப் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை’

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

சுமந்திரனை எவருமே கணக்கெடுக்கத் தேவையில்லை என கட்சியின் தலைவரே குறிப்பிடும் போது நான் அவரை  பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“அம்பாறை மாவட்டத்தில் முற்றும் முழுதாக பறிபோவதற்கான நிலைமை இருக்கின்றது .அப்படியான சூழ்நிலையில்தான் இம்மாவட்டத்தில் இந்த தேர்தலை ஏதிர்நோக்கி இருக்கின்றோம். இந்த தேர்தலின் பிற்பாடு தமிழ் மக்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எங்கள் அமைப்பை தவிர வேறு எந்த அமைப்புக்கு வாக்களித்தாலும் இது தமிழர் தாயக நிலப்பரப்பல்ல சிங்கள பௌத்த மக்களுக்குதான் சொந்தம்  என காட்டப்படுவதுடன் தமது உரிமைகளை தாங்களாகவே கைவிடும் நிலைக்கு வந்துவிடுவோம்.

எனவே இதனை எமது தார்மீக கடமையாக விளங்கி கொண்டு சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து 75 வருடங்களாக பாதுகாத்து வரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க எம்மை ஆதரிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் என்னை விவாதத்துக்கு அழைத்து போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதாவது, அதில் சுமந்திரனின் கருத்தை யாரும் கணக்கெடுக்க தேவையில்லை என்பது தான். எனவே சுமந்திரனை எவருமே கணக்கெடுக்க தேவையில்லை என கட்சியின் தலைவரே கூறும்போது நான் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனது நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை என்றே கூறுவேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .