2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சுருட்டு பற்றவைத்த வயோதிபர் தீயில் எரிந்து உயிரிழப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுருட்டு பற்றவைத்தபோது வயோதிபர் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பட்டின சபைவீதி, மானிப்பாயைச் சேர்ந்த ஆதன் சின்னமணி (வயது 95) என்பவராவார்.

மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி இரவு 10:30 மணியளவில் சுருட்டுக்கு தீப்பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை  சாராம் மீது போட்டுள்ளார். தீயில் எரிந்த அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X