2025 மே 22, வியாழக்கிழமை

சிசு கொலை: தாய்க்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 நாட்களேயான தனது சிசுவைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்ட தாயொருவரை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மெதிவெல என்ற பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தாயே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த தாய் தனது சிசுவுடன், பொரளையிலுள்ள காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் ஒன்றினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய சிசுவைக் கொலைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X