Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 16 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
"இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" என்ற உயர்மட்ட மாநாட்டுடன் இணைந்த அவரது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இதன்போது, "பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கையின் வலுவான செயல்திறன் மற்றும் உத்வேகத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று கீதா கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்த உத்வேகத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், "அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மிக முக்கியமானது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு IMF துணை நிர்வாக இயக்குநர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago