2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’ஜனாதிபதியின் தலை​யில் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலையில் மிகப்பெரிய பொறுப்புக்களை சுமத்தியே நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக நியமித்துள்ளனரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு ​மேலும் கருத்துரைத்த அவர்,   

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷ மிகப்பெரிய பாரங்களை சுமந்துகொண்டே நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதாகவும், வஹாப் பயங்கரவாதம் ஒழிப்பு, வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புக்கள் அவர் தலையில் சுமத்தப்பட்டன என்றும் தெரிவித்தார். 

அரசமைப்பு திருத்தம் என்ற பேரில் அரசாங்கத்தை முடக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கத்திலேயே அவர் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர்,  அந்த கொள்கையுடன் செயற்படகூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்மதால் மாத்திரமே அது சாத்தியப்படுமென தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .