Thipaan / 2017 மே 31 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜ் திபான்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், இன்றும் அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை எனவும் சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆகையினால், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 24ஆம் திகதி மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், தேரர் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026