2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தடை செய்யப்பட்ட ஆடையுடன் வருகைதந்தவர்கள் கைது

Editorial   / 2019 மே 12 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யபட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் – ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்​டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார்.

எனினும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்​டிருந்த சிலர் குறித்த ஆடையை மாற்றிவிட்டு வருமாறு அறிவுறித்தியுள்ளனர். எனினும், அவர் மறுத்தமையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .