2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட இராணுவ அதிகாரியின் வீட்டில் கொள்ளை

Editorial   / 2020 ஜூலை 19 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளானவரென உறுதிப்படுத்தப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டை உடைத்து, கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராகக் கடமையாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த இராணுவ அதிகாரியின் தலவத்துர பிரதேசத்திலுள்ள வீடு, உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் 19ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ள இவர், இந்த மாதம் 11ஆம் திகதி தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டதையடுத்து,  இவரது மனைவி மற்றும் மகள்மார் இருவர், தாய் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே அவர்கள் வீடு உடைக்கப்பட்டு பெறுமதியான ​பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில்  3 விசேட பொலிஸ் குழுக்கள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தவுலகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 


 

.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .