Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(செ.கீதாஞ்சன்)
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாள்கள் கண்காணிப்பினை நிறைவு செய்த 219 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
தென்கொரியாவிற்கு சென்று இம்மாதம் 2 ஆம் திகதியன்று நாடுதிரும்பியவர்கள் கட்டுநாயக்கா விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்த்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் போது பிசிஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதென,
கண்டறியப்படாத நிலையில் இவர்கள் இன்று(18) அதிகாலை 4.00 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விமானப்படைத்தள கண்காணிப்ப நிலையத்தின் குரூப் கெப்டன் அநுருத்த விஜயசிறிவர்த்தன தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைத்தார்.
கடற்படையினரின் பாதுகாப்புடன் இவர்கள் 7 பேருந்துக்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களின் கர்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 06 பெண்களும் 03 சிறுவர்களும் 210 ஆண்களும் அடங்குகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago