2025 ஜூலை 05, சனிக்கிழமை

தனியார் பஸ் விபத்தில் 8 பேர் காயம்

Editorial   / 2019 டிசெம்பர் 31 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் பயணித்த தனியார் பஸ், இன்று (31) காலை கும்புல்கம பிரதேசத்தில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில், 08 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெம்மாத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல பகுதியில் இருந்து ஹெம்மாத்தகம நோக்கி பயணித்த குறித்த பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இந்த விபத்து நிகழந்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் 15 பயணிகள் இருந்துள்ளதுடன், நான்கு பெண்கள் உள்ளிட்ட 08 பேர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .