Editorial / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியில், பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் டயர் விற்பனை நிலையமொன்றும் அதன் களஞ்சியசாலையும் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் முழுமையாக அழிந்துள்ளதாகத் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் பல மணிநேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ ஏனைய கடைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டதால் ஏற்படவிருந்த பெரும் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதிகாலை வேளையில் இந்த விற்பனை நிலையத்தினுள் தீ பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பொலிஸார், மாநகர சபை, மின்சார සபை மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைத் தெளிவுபடுத்தி, தீயைக் கட்டுப்படுத்தும் பாரிய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அதனால் ஏற்பட்ட நஷ்ட விபரங்களும் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனப் பொலிஸார் மேலதிகமாகத் தெரிவித்தனர்.
21 minute ago
22 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
27 minute ago