2025 ஜூன் 16, திங்கட்கிழமை

தயா கமகேவின் 3 நிறுவனங்கள் ஏலம்

S.Renuka   / 2025 ஜூன் 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களின் பொது ஏலத்தை நடத்த கொழும்பு வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும் என்றும் கொழும்பு வணிக நீதிமன்றத்தின் பதிவாளர் மற்றும் பிரதி நிதியாளர் தெரிவித்துள்ளார்.

‘பீப்பிள்ஸ் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ்’ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.104,229,342 தொகையை வசூலிக்கும் நோக்கில் மூன்று நிறுவனங்களையும் பொது ஏலத்தில் விட உத்தரவிடப்பட்டுள்ளது.

‘பீப்பிள்ஸ் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ்’ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.108,309,342 தொகையில் சுமார் ரூ.4,080,000ஐ பிரதிவாதிகள் செலுத்தியுள்ளதால், மீதமுள்ள தொகையை வசூலிக்கும் நோக்கில் நவம்பர் 10, 2022 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தயா குரூப் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .