Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ், வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளுக்காக, நாளை புதன்கிழமை ( 10) வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வவுனியா நீதிமன்றத்தினால் தயா மாஸ்டருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிராக, பல குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் நெருங்கிய நண்பராகவும் தயா மாஸ்டர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
2 hours ago