2025 ஜூன் 28, சனிக்கிழமை

தாமரை கோபுரம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரை கோபுரம் நிர்மாணத்தின் போது, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற துஷார இந்துனில், குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .