2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

தாயுடன் தப்பிச்சென்ற குழந்தை மீட்பு

J.A. George   / 2020 நவம்பர் 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.டி.எச்-இல் இருந்து தப்பிச்சென்ற இரண்டரை வயது குழந்தை, எஹெலியகொட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் அங்கு வந்து குழந்தையை வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தை ஒப்படைக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுகாக ஐ.டி.எச்-இல் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் அங்கிருந்து இரவு 9.10 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த தப்பிச்சென்ற 26 வயதுடைய குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X