2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருத்திய வர்த்தமானி இன்று வெளியாகும்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவையின் விடயதானங்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி, இன்று (07) வெளிவருமென, அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த 2ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது, விடயதானங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. அக்கூட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே, விடயதானங்கள் அடங்கிய திருத்தப்பட்ட வர்த்தமானி, இன்று (07) வெளியிடப்படவுள்ளது.  

இதேவேளை, மேற்படி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கிடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

திருத்தத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருக்கும் அமைச்சுகளுக்குரிய விடயதானங்கள் பல, ஏனைய அமைச்சுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என அறியமுடிகின்றது. 

இதேவேளை, அரச வங்கிகள் மற்றும் அரச பெருந்தோட்டங்கள், அமைச்சர் லக்ஷ்மன் கி​ரியெல்லவுக்கு கீழிருக்கும் அரச தொழில்முயற்சி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .