2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தொற்றுக்குள்ளான முதலாவது ஆலோசகர் குணமடைந்துள்ளார்

Editorial   / 2020 ஜூலை 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், முதலாவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆலோசகர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

ஹபராதுவை- ஹினட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த ஆலோசகர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, பொரளை ஐ.டி.எச்இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த ஆ​லோசகரின் மனைவி உள்ளிட்ட இவருடன் தொடர்பிலிருந்த 21 பேருக்கும் முதலாவது பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் 22ஆம் திகதி இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படவுள்ளதாகவும்  ஹபராதுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .