2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தேக்கு மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல பிரதேசத்தில் போலியான அனுமதிப்பத்திரத்துடன், 63 தேக்கு மரக்குற்றிகளை லொறியொன்றில் ஏற்றி வந்த இருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

லொறியின் சாரதியும் அவரின் உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் டிக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் கந்தர பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த இருவரையும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கந்தர பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .