2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தோட்டத்திலிருந்து கேரள கஞ்சா மீட்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், கற்பிட்டி - கந்தக்குளியப் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 25 கிலோகிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பொற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .