2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திணைக்களம் இடம்மாறுகிறது

Gavitha   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற
உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே  அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள காவலாளியொருவர், 500 ரூபாய் இலஞ்சம் வாங்கியதை தான்  பார்த்ததாக புத்திக பத்திரண எம்.பி தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நாவின்ன, திணைக்களம் செத்சிறிபாயவுக்கு மாற்றப்பட்டதன் பின்னர், இவ்வாறான நடவடிக்கைகளை முற்றிலும் ஒழித்துவிடமுடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X