2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே, அரன்கல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்றில் பயணித்த இனந்தெரியாத குழுவொன்று, கெப் ரக வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாலேயே இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் காயமடைந்த இருவரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X