2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

‘நில்கல’ பல்லுயிர் வனமாக பிரகடனம்

Simrith   / 2025 ஜூன் 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் இலங்கையின் தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு ஏற்ப, நில்கல காடு  பாதுகாக்கப்பட்ட வனமாக  உத்தியோகப்பூர்வமாக   ஜூன் 2 ஆம் திகதிஅறிவிக்கப்பட்டது, இது பல்லுயிர் பாதுகாப்பில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.

இந்த பிரகடன விழா சுற்றுச்சூழல் அமைச்சர் தமிதா படபெந்தியின் தலைமையில் பிபிலவில் உள்ள ரத்துகல பூர்வீக பாரம்பரிய மையத்தில் நடைபெற்றது.

புதிதாகப் பாதுகாக்கப்பட்ட பகுதி 40,683 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் மடகம, பிபில, நில்கல மற்றும் இங்கினியாகல ஆகிய முக்கிய வன மண்டலங்களை உள்ளடக்கியது. பிபில பகுதி வனத்தின் முக்கிய பாதுகாப்புப் பிரிவாக உள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .