Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 25 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளாவிய ரீதியில் இன்று (25) மற்றும் நாளை (26) ஆகிய இரு தினங்கள் முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, நேற்று (24) இரவு 8.00 முதல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தவிற ஏனைய 18 மாவட்டங்களில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும், இரவு 8.00 மணி தொடக்கம் காலை 5.00 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நேரங்களில் அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago