S. Shivany / 2021 மார்ச் 14 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரண்டு கட்டங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அவர்களை தனிமைப்படுத்துவது போதுமானதென, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிய சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடைந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர், சகல தகவல்களையும் சமர்ப்பித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும் என்றும், நாட்டுக்கு வருவதற்கு முன்னர் 96 மணித்தியாலங்களில் மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் கொவிட் தொற்று இல்லை என்பதற்கான உறுதிச் சான்று மற்றும் நாட்டை வந்தடைந்து 48 மணிநேரத்துக்குள்ள மீண்டும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago