R.Tharaniya / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாரம்மல பொலிஸ் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (12) அன்று அதிகாலை நடந்த விபத்தில் இருவர் பலி
சொரொம்பாவ நோக்கிச் சென்ற லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் மற்றும் ஒரு கல்வெர்ட் மோதியதில் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொரியின் பின்னால் பயணித்த இருவர் வாகனத்தில் நசுங்கி, நாரம்மல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 26 மற்றும் 29 வயதுடைய வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago