Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்த சத்சர் நிமேஷின் உடல் குறித்து ஏப்ரல் 23 ஆம் திகதி புதிய பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஸ்ரீயந்த அமரரத்ன, கராபிட்டிய வைத்தியசாலையின் டொக்டர் பி.ரோஹன ருவன்புர, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முதித விதானபத்திரன ஆகிய மூவரடங்கிய வைத்தியர் குழுவினால் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 9 ஆம் திகதி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக முன்னிலையான சட்டத்தரணி, இறந்தவரின் தாயார் ஏற்கனவே மேற்கொண்ட பிரேத பரிசோதனையை ஏற்க மறுப்பதாக ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, உடலை தோண்டி எடுத்து, மூன்று நிபுணர் வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவால் புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று, அந்த உத்தரவுக்கு இணங்க, முன்மொழியப்பட்ட பரிசோதனை மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிபுணர் குழுவின் விவரங்களை சிஐடி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பித்தது.
16 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago