Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்முறைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த, இராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துமெனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, மேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்தவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று (13) அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில், நேற்றிரவு (13) முஸ்லிம்களுக்கு எதிராகச் சிலர் வன்முறைகளைக் கட்டவிழ்த்தனர் என்றும் சிலாபத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்களுக்கு எதிராக, இராணுவமும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து, முழு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், சுமுகமாகத் தீர்வை காண்பதற்கே இராணுவம் விரும்புகிறது எனவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், பொதுமக்களிடம் அவர் இதனூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago