2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் புதன்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் , கடற்படையினரால்  நெடுந்தீவு கடற்பரப்பினுள்  கடல் ரோந்தில்டுபட்டிருந்த போது குறித்த மீனவர்களை கைது செய்து , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.  

விசாரணைகளின் பின்னர் , கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X