2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’பயங்கரவாதத்தை ஊக்குவிப்போருக்கு பிணையில்லை’

Editorial   / 2019 மே 13 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சமாதானத்தைச் சீர்குலைக்கும் முகமாகவும் நாட்டுக்குள் தீவிரவாதத்தை உண்டாக்கும் வகையிலும்  செயற்படுவோருக்கு, ஒருபோதும் பிணை வழங்கப்பட மாட்டாதென, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன எச்சரித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர், தற்போது கைது செய்யப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும், எந்தவொரு காரணத்துக்காகவும், அவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள நிலையிலேயே, பதில் பொலிஸ் மா அதிபர், மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .