2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘பயங்கரவாத எதிர்ப்பை இரத்துச் செய்வோம்’

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி,  நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை வெளியிடப்போவதாகவும் தாம் ஆட்சிபீடமேறியவுடன் அந்தச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என சூளுரைத்துள்ளது.

கொழும்பில் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகவியலாளர்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (02) சந்தித்தார். இதன்போதே ​மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை மிகவும் இரகசியமாக கொண்டுவந்து சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அப்படி நிறைவேற்றப்பட்டால், தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை ​இரத்துச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள்  தேர்தல்கள் பிற்போடப்படுவதனால். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டை எதிர்த்து வாக்களித்ததாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X