Editorial / 2026 மே 19 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் இன்னமும் தடை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் இந்த அஞ்சலி நிகழ்வு இந்திய அரசியல் வட்டாரத்தில் புதியதொரு அரசியல் விவாதத்தையும் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளது.
இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ 'X' (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள முதலமைச்சர் விஜய் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“முள்ளிவாய்க்கால் நினைவுகளை நம் நெஞ்சில் சுமப்போம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ் தொப்புள்கொடி உறவுகளின் உரிமைகளுக்காக நாம் எப்போதும் துணை நிற்போம்!”
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் இந்த வேளையில், ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கும், உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களின் இறையாண்மைக்கும் தமிழக அரசு என்றும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தமிழக முதல்வர் விஜய் தனது இப்பதிவின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைவருக்குத் தமிழக முதலமைச்சரே பகிரங்கமாக அஞ்சலி செலுத்தியிருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்திலும், மாற்று அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
11 minute ago
31 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
36 minute ago
46 minute ago