Janu / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத் தலைவர் தங்கவேல் சிறிதரன் தலைமையில் வந்தாறுமூலை வளாக முன்றலில் புதன்கிழமை (25) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "எதிர்க்கட்சியில் இருந்தபோது எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அதனைத் தர மறுக்கிறார்கள். ஜனாதிபதி பாதீட்டில் (Budget) கொடுப்பனவுகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்தும், திறைசேரி அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர். பல அறிக்கைகளைச் சமர்ப்பித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என வேதனையுடன் தெரிவித்தனர்.
பேரின்பராஜா சபேஷ்

6 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago