2025 ஜூன் 18, புதன்கிழமை

பல்வேறு பிரதேசங்களில் நீர்வெட்டு

Editorial   / 2020 ஜூலை 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் குழாயில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக பத்தரமுல்லை பகுதியை அண்மித்த பகுதிகளுக்கு  இன்று (23) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இரவு 10 மணி தொடக்கம் 8 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, திருத்தப்பபணிகள் காரணமாக களுத்துறையின் பல பகுதிகளுக்கு நாளை (24) காலை 8 மணி தொடக்கம் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொதுபிடிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பாயாகல, பிலமினாவத்த, போம்புவல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், பேருவளை, களுவாமோதர, மோரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தொட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .